தரம் 10 வகுப்பறைகளுக்கு சிட்னி பழைய மாணவர்களின் நவீன பங்களிப்பு


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 10 வகுப்பறைகளுக்கு சிட்னி பழைய மாணவர் சங்கத்தின் நவீன பங்களிப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தரம் 10 வகுப்பறைகளில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நான்கு திறன் பலகைகள் (Smart Panels) 22.08.2025 அன்று பொருத்தப்பட்டன.

இந்தப் பங்களிப்பு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி கிளையின் நிதியுதவியால் மேற்கொள்ளப்பட்டது. கல்வி துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்கள் நவீன கற்றல் முறைகளை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிட்னி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை ரவிராஜ் கலந்து கொண்டு, பள்ளிக்கு சங்கத்தின் தொடர்ந்து வழங்கும் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது என்பதையும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப் போன்று அனைத்து பாடசாலைகளின் பழைய மாணவர்களும் தங்கள் பாடசாலைகளுக்காக சிந்திக்க வேண்டும் என்பதையும் இந்நிகழ்வு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *